'Booster தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியில் மாற்றமில்லை'

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 3ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

COVID-19

Omicron variant concerns Source: AAP

  • NSW-இல் மாணவர் ஒருவருக்கு Omicron தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவருக்கு சமூகப்பரவல் மூலமே இத்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
  • Northern Territory-இல் கோவிட் தொடர்பான முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் Northern Territory-இல் மாத்திரமே கோவிட் தொடர்பான மரணம் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலதிகமாக தளர்த்தி வழமை நிலைக்கு திரும்புவது குறித்த அரசின் திட்டத்தில் மாற்றம் இல்லையென சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • Omicron பரவல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை ஆஸ்திரேலியாவிலுள்ள ஆப்பிரிக்க சமூகத்தினர் விமர்சித்துள்ளனர்.
  • தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு மேற்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
  • பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை என்று தடுப்பூசி நிபுணர் குழுவான ATAGI கூறியுள்ளது.
  • கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அரசு கூடுதலாக $540 மில்லியன் நிதியுதவியை அறிவித்துள்ளது.
  • டாஸ்மேனியா தனது பயண விதிகளை டிசம்பர் 15 முதல் மாற்றுகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,188 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 11  பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 337 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 4 பேருக்கும்  NT- இல் புதிதாக இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 3 December 2021 5:02pm
Updated 3 December 2021 5:06pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends