கோவிட் பரவல் காரணமாக சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டை இறுக்கமாகப் பேணிவந்த நியூசிலாந்து அரசு, தற்போது சர்வதேச பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவிக்கவுள்ளது.
ஜுலை மாதம் முதல் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் நியூசிலாந்து நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னரேயே இவர்களை அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாட்டு தளர்வு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார்.
அதேபோன்று நியூசிலாந்து விசா வைத்திருக்கும் அனைவரும் அங்கு செல்வதற்கு ஏற்றவகையில் இக்கட்டுப்பாட்டு தளர்வு அமையவுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் என Jacinda Ardern மேலும் தெரிவித்துள்ளார்.
அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் விடுதிகளில் தனிமைப்படுத்தும் நடைமுறையைப் பேணிவந்த நியூசிலாந்து அரசு, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும்வகையில், பெப்ரவரி இறுதியிலிருந்து கட்டம் கட்டமாக கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
NSW, விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 4 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 8,911 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 1,005 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 47 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 5,499 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 198 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 3,797 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர். 233 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 923 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
ACT- இல் புதிதாக 599 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 38 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,099 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 113 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,037 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 109 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
NT- இல் புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 26 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.