'Close Contact': அரசின் புதிய வரையறையை தெற்கு ஆஸ்திரேலியா ஏற்க மறுப்பு!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 31ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Prime Minister Scott Morrison holds a National Cabinet meeting in Canberra, 30 December

Prime Minister Scott Morrison holds a National Cabinet meeting in Canberra, 30 December. Source: AAP Image/Lukas Coch

  • கோவிட் தொற்றாளருடன் "நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்-" என்பதற்கான அரசின் புதிய வரையறையை  நியூ சவுத் வேல்ஸ், விக்டேரியா, குயின்ஸ்லாந்து மற்றும் ACT ஆகியன ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தியுள்ளன.
  • புதிய வரையறை டஸ்மேனியாவில் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. Northern Territory மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன தமது முடிவினைப் பின்னர் அறிவிக்கவுள்ளன. ஆனால் தெற்கு ஆஸ்திரேலியா இதனை நிராகரித்துள்ளது.
  • Close Contact என்பதன் புதிய வரையறையின்படி, கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் ஒரே வீட்டில் வாழ்பவர் அல்லது 4 மணிநேரங்களுக்கு மேலாக ஒரே வீட்டில் அல்லது வீடுபோன்ற இடமொன்றில் இருந்தவரே Close Contact  என்பதாக கருதப்படும்.
  • ஆனால் தொற்று உள்ளவருடன் 15 நிமிடங்களுக்கு மேல் செலவிட்ட எவரும் Close Contact-ஆக கருதப்படுவர் என தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
  • Close Contact என இனங்காணப்படும் ஒருவர் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தெற்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களாக உள்ளது.
  • டஸ்மேனியா, உள்நாட்டுப்பயணிகளுக்கான PCR சோதனை நடைமுறையை  ஜனவரி 1 முதல் கைவிடுகிறது.
  • தெற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 2 வயதுக்குட்பட குழந்தையொன்று மரணமடைந்துள்ளது. இம்மரணத்திற்கான காரணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. 
  • நாட்டிலுள்ள 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் கோவிட் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டுள்ளனர்.
  • நாடு முழுவதும் rapid antigen test kits விலை உயர்ந்து வருகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 21,151 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தார்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 5,919 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர்.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 137 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 3,118 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 31 December 2021 2:22pm
Updated 31 December 2021 2:27pm


Share this with family and friends