Melbourne Cup குதிரையோட்டப் போட்டிக்குப் பத்தாயிரம் பேர் செல்லலாம்; NSW முடக்க நிலையிலிருந்து நாளை மீள்கிறது

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் பத்தாம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Wafanyakazi waandaa viti nje ya mgahawa mtupu, kwa kufunguliwa tena ndani ya jengo la QVB mjini Sydney.

Wafanyakazi waandaa viti nje ya mgahawa mtupu, kwa kufunguliwa tena ndani ya jengo la QVB mjini Sydney. Source: AAP/Dan Himbrechts

  • Melbourne Cup குதிரையோட்டப் போட்டிக்கு, தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் பத்தாயிரம் பேர் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்
  • NSW மாநிலத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படுகின்றன; NSW மாநிலத்தில் வாழ்பவர்களில் சுமார் 90 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றாவது போட்டிருக்கிறார்கள்
  • Virgin Airlines விமான பணியாளர் ஒருவர் தொற்றுடன் மூன்று மாநிலங்களுக்குப் பயணித்திருக்கிறார் என்பதை அறிந்த சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,890 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று கண்ட 538 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்களில் 7 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.

தொடர்பு தடமறியும் செயற்பாடு மாநில அளவில் குறைக்கப்பட்டுள்ளது.  தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி இருந்தவர்கள் சென்ற இடங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகிறது.

விக்டோரிய மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் மாநிலத்தில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் தொடங்கப் படலாம் என்ற பரீட்சார்த்தத் திட்டத்தை Premier Daniel Andrews அறிவித்தார்.

பல்லாயிரக் கணக்கானவர்கள் பங்கு கொள்ளும் ஒரு இசை நிகழ்ச்சி மெல்பன் நகரில் அக்டோபர் 30ஆம் தேதி ஒழுங்கமைப்பட்டுள்ளது.

Melbourne Cup குதிரையோட்டப் போட்டி நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நடைபெறும்.  இதற்கு, தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் பத்தாயிரம் பேர் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 477 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளார்கள். 

மாநிலத்தில் வசிப்பவர்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டிருக்கிறார்கள்.  மாநிலத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்குத் தேவையான இலக்கு எட்டப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வசிப்பவர்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 72.8 சதவீதமானோர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.

Hunter New England பகுதியிலுள்ள Uralla என்ற இடத்தில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.


கடந்த 24 மணி நேரத்தில்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக யாருக்கும் தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை.
  • ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 30 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  16 பேருக்குத் தொற்று எங்கிருந்து வந்தது என்பது தெரியும், மீதி ஆராயப்படுகிறது.
  • Virgin Airlines விமான பணியாளர் ஒருவர், மெல்பன், அடிலெய்ட், சிட்னி மற்றும் Newcastle ஆகிய இடங்களுக்குத் தொற்று இருக்கும் போது விமான சேவைப் பணிகளில் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை ஈடுபட்டிருக்கிறார்.  அவர் பயணித்த விமானங்களில் அவர் மூலமாக தொற்று பரவியிருக்கலாம் என்று மூன்று மாநிலங்களின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 10 October 2021 2:20pm
Updated 12 August 2022 3:00pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends