"உள்நாட்டுப் பயணங்களுக்கான PCR சோதனையை இலவசமாக மேற்கொள்ளலாம்" - Greg Hunt

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 24ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

A woman waits to receive a COVID-19 test in the eastern suburbs of Sydney Tuesday, Sept. 14, 2021.

A woman waits to receive a COVID-19 test in the eastern suburbs of Sydney Tuesday, Sept. 14, 2021. Source: AAP

  • உள்நாட்டுப் பயணிகள் கோவிட்-19 PCR சோதனைகளை அரசு நடத்தும் சோதனை மையங்களில் மேற்கொள்ளும்போது,  அதற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை என்பதை சுகாதார அமைச்சர் Greg Hunt உறுதிப்படுத்தியுள்ளார்.  குயின்ஸ்லாந்து செல்லும் பயணிகளுக்கான  PCR சோதனைக் கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசு செலுத்துமா அல்லது மாநில அரசு செலுத்த வேண்டுமா என்பது தொடர்பில் குழப்பம் நிலவியிருந்த பின்னணியில் அமைச்சர் இவ்வறிவிப்பினை விடுத்துள்ளார். 
  • குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களுக்குச் செல்பவர்கள், அங்கு செல்வதற்கு 72 மணித்தியாலங்களுக்குள்ளாக கட்டாய PCR சோதனை ஒன்றை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
  • அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலாந்து நாட்டினர் மற்றும் தகுதியான பிற பயணிகள், விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல், ஆஸ்திரேலியாவிலிருந்து  நியூசிலாந்துக்கு செல்ல முடியும். ஆனால் பயணிகள் ஏழு நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1196 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 248 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

NT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 11 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

குயின்ஸ்லாந்தில் சமூகப் பரவல் மூலம் எவருக்கும் தொற்று இனங்காணப்படவில்லை

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 24 November 2021 2:39pm
Updated 24 November 2021 2:45pm


Share this with family and friends