- சர்வதேச எல்லைகள் திட்டமிட்டபடி டிசம்பர் 15ஆம் தேதி திறக்கப்படும் என சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.
- குயின்ஸ்லாந்து மாநிலம், NSW மற்றும் விக்டோரியா மாநிலத்தவர் உட்பட முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட உள்நாட்டுப்பயணிகளுக்கென தனது எல்லைகளைத் திறந்ததால், நூற்றுக்கணக்கானோர் குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
- சுமார் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் இப்போது COVID-19 Booster தடுப்பூசியைப் பெற தகுதி பெற்றுள்ளனர். Booster தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான கால இடைவெளி ஆறு மாதங்களில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் Moderna தடுப்பூசியையும் booster தடுப்பூசியாக பயன்படுத்தலாம் என ATAGI ஒப்புதல் அளித்துள்ளது.
- Omicron பரவலானது booster தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை இன்னும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் Brendan Murphy கூறியுள்ளார்.
- Newcastle-இல் உள்ள Argyle House nightclub கோவிட் பரவலுடன் தொடர்புடையோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சிலருக்கு omicron தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் சுமார் 700 பேர் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
- NSW மாநிலத்தில் புதிதாக 9 பேருக்கு omicron தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,290 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 536 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.