NSW மாநிலத்தில் 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டதும் வாழ்க்கை சுமுக நிலைக்குத் திரும்பும்

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 05ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Jamii zakwanza zapewa chanjo ya COVID-19 mjini Sydney

Wanachama wa jamii zawatu wa asili, wapokea chanjo za Covid-19 katika zahanati iliyo jenga katika kituo chakitaifa cha ubora wa asili. Source: AAP/Dan Himbrechts

NSW மாநிலத்தில் 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டதும் வாழ்க்கை சுமுக நிலைக்குத் திரும்பும்.

  • New South Wales மாநிலத்தில் 40 சதவீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள்.
  • விக்டோரிய மாநிலத்தில் இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களுக்கு நிதி ஆதரவு வழங்கப்படும்
  • ACTயில் சமூகப் பரவல் மூலம் 15 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது

நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,485 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்ட 175 பேர் மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 72 பேருக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது.
மா நிலத்தில் 73 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுள்ளார்கள். 40 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்.
80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவுடன் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்றும், முடக்க நிலை அதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் Premier Gladys Berejiklian அறிவித்தார். அடுத்த இரு வாரங்களில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அவர் எச்சரித்தார்.
டுக் கொள்ள பதிவு செய்யலாம்.


விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 183 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 101 பேருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியும்.
விக்டோரிய மாநிலத்தில் வழங்க 27 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாநில அமைச்சர் Luke Donnellan அறிவித்தார்.
என்ற தரவுகளை காணலாம்.


கடந்த 24 மணிநேரத்தில்

  • ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 15 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 13 பேருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியும். தொற்று கண்ட ஆறு பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் தொற்று இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
  • மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட பின்னர்தான் கடுமையான முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்த நாள் அறிவிக்கப்படும்.
How can I shop safely
Source: ALC


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 5 September 2021 2:16pm
Updated 12 August 2022 2:59pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends