கோவிட் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைகிறது!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 26ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

A paramedic moving equipment outside St. Vincent's Hospital in Melbourne,

A paramedic moving equipment outside St. Vincent's Hospital in Melbourne. Source: AAP

  • NSW, விக்டோரியா, குயின்ஸ்லாந்து, டாஸ்மேனியா மாநிலங்களில் கோவிட் தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
  • இன்றைய பொது விடுமுறை நிகழ்வுகள் காரணமாக, வரவிருக்கும் நாட்களில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
  • கோவிட் பரவல் தொடங்கியதில் இருந்து NSW மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இப்போது 1 மில்லியனைத் தாண்டியுள்ளது.
  • வயது முதிர்ந்தவர்கள் கோவிட் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சன நெருக்கடி மிகுந்த இடங்களுக்குச் செல்வதை வயோதிபர்கள் தவிர்க்க வேண்டுமென குயின்ஸ்லாந்து அரசு கோரியுள்ளது. 
  • நாடு முழுவதும் கோவிட் தொடர்பான மேலும் 87 இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • NSW மாநிலத்தில் 2,794 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.  இவர்களில் 175 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
  • விக்டோரிய மாநிலத்தில் 1089 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 113 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 889 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 47 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும்  21,030 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 13,507 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 35 பேர்  மரணமடைந்தனர். 

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 712 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக  13,551 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  9 பேர் மரணமடைந்தனர். 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 26 January 2022 3:12pm
Updated 26 January 2022 8:05pm


Share this with family and friends