- புதன் கிழமையன்று தேசிய அமைச்சரவையால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களின்படி, rapid antigen சோதனையிலிருந்து நேர்மறையான முடிவைப் பெறுபவர்கள் இனி கோவிட் தொற்றை உறுதிப்படுத்த PCR சோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை.
- நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
- புதன் இரவு 8 மணி வரையான தரவுகளின்படி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,609-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 131 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
- விக்டோரிய மாநிலத்தில் 631 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 100 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
- குயின்ஸ்லாந்தில் 284 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
- இன்று இரவு 11:59 மணி முதல் விக்டோரியாவில் density limit-கட்டுப்பாடு மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அத்துடன் rapid antigen சோதனையை மேற்கொண்டு நேர்மறை முடிவைப்பெறும் ஒருவர், அதனை சுகாதாரத் துறைக்கு அறிவிப்பது கட்டாயமாகும்.
- நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் தொற்று காரணமாக 20 வயதுகளிலுள்ள நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக NSW Health தெரிவித்துள்ளது. குறித்த நபர் கோவிட் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டவர் எனவும், இவருக்கு வேறு நோய்நிலைமைகள் எதுவும் இருந்திருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
- முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், ஜனவரி 7 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல், எதிர்மறையான PCR சோதனை முடிவை சமர்ப்பிக்காமலேயே நாட்டிற்குள் நுழைய முடியும் என இங்கிலாந்து அறிவித்துள்ளது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 34,994 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 21,997 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.
டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 751 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 10,332 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் 3,070 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ACT-இல் புதிதாக 992 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.