- NSW மாநிலத்தில் தொற்று கண்டுபிடிக்கப்படாத பல இடங்களிலும், கழிவு நீரின் Covid-19 கூறுகள்
- விக்டோரிய மாநிலத்தில் தற்போது தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 7,611
- ACTயில் புதிதாக 32 பேருக்குத் தொற்று உறுதி
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,007 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 522 பேர் தென் மேற்கு மற்றும் மேற்கு சிட்னியில் வசிப்பவர்கள். தொற்றினால் மேலும் பதினொரு பேர் இறந்துள்ளார்கள். தொற்று வேகமாகப் பரவிய அண்மைய நாட்களில் மொத்தம் 288 பேர் இறந்துள்ளார்கள். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 344.
NSW மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியிலுள்ள Tamworth, மேற்குப் பகுதியிலுள்ள Oberon , Dareton மற்றும் Balranald, தெற்குப் பகுதியிலுள்ள Hunter மற்றும் Eden ஆகிய இடங்களில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 847 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றாளர்களில் 79 சதவீதமானவர்கள் 50 வயதிற்கும் குறைந்தவர்கள். தொற்றினால் மேலும் ஒருவர் இறந்துள்ளார்.
விக்டோரிய மாநிலத்தில் 16 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்டதன் பின்னர் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இலக்கை எட்டுவதற்கு மேலும் 3.7 சதவீதத்தினர் தடுப்பூசி போட வேண்டும். முன்னர் அறிவிக்கப்பட்டது போல் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் தாமதமாகிறது.
AFL போட்டிகளின் இறுதி சுற்று ஆட்டம் இன்றிரவு நடைபெறுகிறது. இருந்தாலும், அனைவரையும் வீட்டில் தங்கியிருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகிறார்கள்.
கடந்த 24 மணிநேரத்தில்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் பிரிஸ்பன் நகரின் Sunnybankஇல் ஏற்பட்ட தொற்றுடன் தொடர்புடையவர்.
- அந்த இடத்தில் ஏற்பட்ட தொற்றினால் சமூகப் பரவல் மூலம் இதுவரை 2,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.