- மேற்கு ஆஸ்திரேலிய மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
- இதன்படி ஒவ்வொரு வீட்டிற்கும் 5 RAT சோதனை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
- மேற்கு ஆஸ்திரேலிய மாநில குடியிருப்பாளர்கள் தமக்கான இலவச RAT சோதனை உபகரணங்களைப் பெறுவதற்கு அல்லது 13 26843 என்ற இலக்கத்தை அழைப்பதன்மூலமோ விண்ணப்பிக்கலாம். இந்த இலக்கமூடாக மொழிபெயர்ப்பு உதவியும் வழங்கப்படுகிறது.
- இன்று திங்கட்கிழமை 28 பிப்ரவரி முதல், நியூ சவுத் வேல்ஸில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணியவேண்டுமென்ற கட்டாயமில்லை.
- நியூ சவுத் வேல்ஸ் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வாரத்திற்கு இருமுறை RAT சோதனை செய்யவேண்டுமென்பது இனிமேல் கட்டாயமில்லை. ஒவ்வொரு மாணவரின் வீட்டிற்கும் எட்டு இலவச RAT உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோரின் விருப்பப்படி அதனைப் பயன்படுத்தமுடியும்.
- விக்டோரியாவில் அனைத்து elective surgery-களும் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன.
- விக்டோரியாவில் PCR சோதனை முடிவுக்காகக் காத்திருக்கும் ஒருவர், $450 கோவிட்-19 கொடுப்பனவைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் நாளையாகும். இதன் பின்னர் குறித்த கொடுப்பனவு நிறுத்தப்படுகிறது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
NSW, விக்டோரியா,ACT, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 12 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 5,856 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர். 1,136 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 55 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 5,852 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 பேர் மரணமடைந்தனர். 283 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 49 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 3,312 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 311 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 734 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
ACT- இல் புதிதாக 464 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 44 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில், புதிதாக 1136 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவில், புதிதாக 1358 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 109 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.