Latest

நாட்டில் புதிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது!!

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

COVID-19 Australia

Tourists near the Sydney Harbour Bridge and the Sydney Opera House. (file) Source: AAP / DEAN LEWINS/AAPIMAGE

NSW மற்றும் விக்டோரியாவில் தலா நான்கு பேர் உட்பட குறைந்தது 11 COVID இறப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளன.

நாளாந்தம் புதிய COVID தொற்று எண்ணிக்கை மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் தொடர்ந்து குறைந்து வருகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 3,394 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 2,147 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 1,233 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 982 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தார்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 565 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

டஸ்மேனியாவில் புதிதாக 168 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ACT- இல் புதிதாக 148 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2023-2024 ஆம் ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச செவிலியர் கல்வியை வழங்கும் விக்டோரிய மாநில அரசின் திட்டம் தொழில்துறை தலைவர்களிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்துள்ளது.

இது மாநிலத்தின் பொது மருத்துவமனை அமைப்புக்கு நல்ல செய்தி அல்ல என்று ஆஸ்திரேலிய தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி Michael Roff கூறினார்.

NSW மாநிலத்தில் இன்று முதல் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பிற தகுதி வாய்ந்த சலுகை அட்டை வைத்திருப்பவர்கள் Service NSW சேவை மையம், மொபைல் சேவை மையம் அல்லது பேரிடர் மீட்பு மையம் ஆகியவற்றில் இருந்து 10 இலவச Rapid Antigen பரிசோதனை கருவிகளை (RAT) பெற்றுக்கொள்ளலாம்

எதிர்வரும் புதன்கிழமை, தேசிய அமைச்சரவை கோவிட் தொற்று கண்டவர்களுக்கான தற்போதைய ஏழு நாள் தனிமைப்படுத்தல் காலத்தை ஐந்து நாட்களாக குறைக்கக்கூடும்.

COVID-19 தொற்றுநோய் பெண்கள் மீது குறிப்பிடத்தக்க நிதி மற்றும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கோவிட் முடக்கநிலையின் போது பெண்கள் தங்கள் வேலை நேரத்தை குறைத்துக்கொண்டனர் அல்லது வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள். அவர்கள் தங்களின் ஆண் துணையை விட அதிகமான வீட்டு வேலைகளை எடுத்துக் கொண்டனர் என முன்னணி ஆராய்ச்சியாளர் Dr Terry Fitzsimmons தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் இலவச காய்ச்சல் flu தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 அன்று முடிவடைகிறது.


கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.



——————————————————————————————


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 29 August 2022 3:34pm
Updated 29 August 2022 5:08pm
By Selvi
Source: SBS


Share this with family and friends