ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 5 ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Perrottet presser Vaccination Centre

NSW Premier Dominic Perrottet speaks health workers during a visit to the South Western Sydney Vaccination Centre in Sydney, Wednesday, January 5, 2022. Source: Credit: AAP Image/Bianca De Marchi

  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 35,054 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பில் "கணிசமான அழுத்தம்" ஏற்பட்டிருப்பதாக Premier Dominic Perrottet ஒப்புக்கொண்டார்.
  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,491-ஆக அதிகரித்துள்ளது.  இவர்களில் 119 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
  • Booster தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியுடைய மக்கள் அனைவரும் இதற்கென முன்பதிவு செய்யும்படி NSW Premier Dominic Perrottet கேட்டுக் கொண்டார்.
  • புதிய பள்ளி ஆண்டில் மாணவர்களை மீண்டும் வகுப்பறைக்கு வரவழைப்பதற்கான திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக NSW Premier Dominic Perrottet கூறினார். பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கும்போது  rapid antigen சோதனைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் Dominic Perrottet தெரிவித்தார்.
  • குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு rapid antigen சோதனை வசதியை மானியமாக வழங்குவது தொடர்பில் அடுத்த தேசிய அமைச்சரவை கூட்டத்தில்  ஆராயப்படவுள்ளது. 

  • விக்டோரிய மாநிலத்தில் 591 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

  • அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு மில்லியன் பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 35,054 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 17,636 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  11 பேர் மரணமடைந்தனர்.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 867 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT-இல் புதிதாக 810 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,781 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் 3,493 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 5 January 2022 3:05pm
Updated 5 January 2022 3:21pm


Share this with family and friends