நாளை சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும்-பிரதமர் உறுதி

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 14ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

اسکات موریسون نخست وزیر استرالیا

اسکات موریسون نخست وزیر استرالیا Source: AAPAAP Image/Con Chronis

  • நியூ சவுத் மாநிலத்தில் கடந்த 10 வாரங்களில் இல்லாதளவுக்கு அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  நாளை, டிசம்பர் 15 முதல் கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு மாநிலம் தயாராக உள்ளது.
  • Newcastle nightclub-இல் ஏற்பட்ட கோவிட் பரவல் மூலம் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 150-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஆகக்குறைந்தது ஒருவருக்கு Omicron தொற்று  இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. NSW-இன் New Hunter பிராந்தியத்தில் நேற்று 28 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • விக்டோரியாவில் mRNA தடுப்பூசி தயாரிப்பு மையத்தை உருவாக்குவதாக பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.
  • நாளை டிசம்பர் 15  முதல் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்பதை பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
  • டாஸ்மேனியா தனது எல்லைகளை நாளை டிசம்பர் 15 முதல் மீண்டும் திறக்க உள்ளது.
  • மேற்கு ஆஸ்திரேலிய மாநில எல்லைகள் பிப்ரவரி 5 2022 முதல் திறக்கப்படவுள்ளது.
  • Omicron திரிபு காரணமாக உலகளவில் முதன்முதலில் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,189 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும்  6 பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 804 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 14 December 2021 2:09pm
Updated 14 December 2021 2:24pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends