5 முதல் 11 வயதுடையவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை மருந்துகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான Therapeutic Goods Administration தொடங்கியுள்ளது என்று சுகாதார அமைச்சர் Greg Hunt கூறினார்.
நோய்த் தடுப்பு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவான ATAGI ஒப்புதல் வழங்கியதும் 5 முதல் 11 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி கொடுக்கப்படத் தொடங்கும்.
வரும் சில நாட்களில் நாட்டில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தைத் தாண்டும் என்றும் அமைச்சர் Greg Hunt கூறினார்.
இதற்கிடையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Goondiwindi பகுதியில் தொற்றுள்ளவர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு Covid சோதனை நிலையங்கள் செயல்பட உள்ளன. இருப்பினும், Goondiwindi நகரத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்படாது.
நாட்டில் இன்று தீபாவளி கொண்டாடப் படுவதால், NSW மாநில பல்கலாச்சார சுகாதார செய்தி சேவை சில ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
Covid-19 புள்ளிவிவரங்கள்
- விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,247 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளார்கள்.
- New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 308 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக மூன்று பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
- ACTஇல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 13 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தடுப்பூசி குறித்த செய்திகள்
Northern Territoryஇல் வாழ்பவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை, நவம்பர் 8ஆம் தேதி முதல், மூன்றாவது சுற்று (booster) தடுப்பூசி கிடைக்கும். தற்போது booster தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது யாருக்கும் கட்டாயப்படுத்தப்படவில்லை.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.