நாடு முழுவதும் மேலும் 53 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று! 90 பேர் மரணம்!!

கொரோனா வைரஸ் குறித்து ஜுலை மாதம் 20ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Actualización COVID-19: Australia registra más de 53,000 casos positivos por día  y 90 muertes

Source: AAP Image/Joel Carrett

விக்டோரியாவில் 28 பேர், குயின்ஸ்லாந்தில் 15 பேர், தெற்கு ஆஸ்திரேலிவில் 22 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 20 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 90 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 53,850 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் இந்த வாரம் இரண்டாவது முறையாக  50,000-க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 15,352 புதிய நோய்த்தொற்றுகளுடன் தினசரி எண்ணிக்கையில் NSW முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து விக்டோரியா (12,984) மற்றும் குயின்ஸ்லாந்து (9,650) ஆகியன உள்ளன.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கநிலையை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை பிரதமர்  Anthony Albanese நிராகரித்துள்ளார். கடந்த தேசிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது மாநில premierகளும் முதலமைச்சர்களும் அவற்றைக் கோரவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் தொழிலாளர்கள் பணியிடத்தில் முகக்கவசம் அணிய வேண்டுமா அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டுமா என்பதை முதலாளிகள் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர்  Anthony Albanese  கூறியுள்ளார்.

மெல்பனில் ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவித்த பிரதமர், தலைமை சுகாதார அதிகாரி பேராசிரியர் Paul Kelly முகக்கவச விதிகளை கட்டாயமாக்க பரிந்துரைக்கவில்லை என்றார்.

இருப்பினும், பேராசிரியர் Kelly நெரிசலான உட்புற அமைப்புகளில் முகக்கவசங்களை அணியுமாறு ஆஸ்திரேலியர்களை வலியுறுத்தி வருகிறார். செவ்வாயன்று, பேராசிரியர் Kelly வெளியிட்ட அறிக்கையில், வரும் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் கோவிட் தொற்றுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.

கடுமையான நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் மத்தியில், கோவிட் காரணமாக அதிக இறப்புகள் சம்பவிக்கலாம் என பேராசிரியர் Kelly குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு, அவர் முதலாளிகளை வலியுறுத்தியுள்ளார்.

நான்காவது கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில் மூன்று மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  15,352 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,984  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 28 பேர் மரணமடைந்தனர். 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 9,650 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 7,901 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இருவர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,774  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  22 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1586 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக  961 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

NT- இல் புதிதாக  642 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 20 July 2022 2:42pm
Updated 20 July 2022 2:45pm


Share this with family and friends