கோவிட் தொற்று காரணமாக ஆஸ்திரேலியா முழுவதும் மேலும் 58 பேர் மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 24ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Australian Health Minister Greg Hunt speaks via video link to the media during a press conference at Parliament House in Canberra

Australian Health Minister Greg Hunt speaks via video link to the media during a press conference at Parliament House in Canberra. Source: AAP

  • நாடு முழுவதும் கோவிட் தொடர்பான மேலும் 58 இறப்புகள் பதிவாகியுள்ள பின்னணியில், சில இடங்களில் omicron அலை 'உச்சத்தை' அடைந்து வருவதாக சுகாதார அமைச்சர் Greg Hunt கூறுகிறார்.
  • Concession card உள்ளவர்களுக்கு இலவச rapid antigen சோதனை  உபகரணங்கள்(RAT) இன்று முதல் கிடைக்கின்றன. 
  • இப்போது முதல் ஜூலை இறுதிக்குள் 16 மில்லியன் RAT உபகரணங்கள் ஆஸ்திரேலியாவை வந்தடையும் என  எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கூறினார்.
  • மற்றுமொரு கோவிட் தடுப்பூசியான Novavax-ஐ ஆஸ்திரேலியாவில் பயன்படுத்துவதற்கான இறுதி ஒப்புதல் ATAGI-இடமிருந்து கிடைத்துள்ளது.
  • Novavax என்பது மூன்று வார இடைவெளியில் வழங்கப்படும் இரு சுற்று தடுப்பூசி ஆகும்.
  • NSW மாநிலத்தில் 2,816 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 
  • விக்டோரிய மாநிலத்தில் 998 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 
  • புதிய பள்ளி ஆண்டுக்குள் நுழைவது குறித்த திட்டத்தினை குயின்ஸ்லாந்து அரசு இந்த வாரம் வெளியிடுகிறது.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ளவர்கள் தமக்கான கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது சுற்றைப்பெற்று  மூன்று மாதங்கள் கழிந்துவிட்டதென்றால்,  இன்று முதல் booster தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும்  15,091 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 24 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 11,695 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 17 பேர்  மரணமடைந்தனர். 

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 619 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக  10,212 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  13 பேர் மரணமடைந்தனர். 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 24 January 2022 4:47pm
Updated 24 January 2022 4:50pm


Share this with family and friends