COVID:ஆஸ்திரேலியாவில் கடந்த 2 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அதிகமானோர் மரணம்

கொரோனா வைரஸ் குறித்து ஏப்ரல் மாதம் 21ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

After New South Wales and Victoria more Australian states and territories are expected to ease isolation rules for close contacts. (file)

Source: AAP Image/Con Chronis

NSW, விக்டோரியா, ACT, NT, தெற்கு ஆஸ்திரேலியா,டஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 50 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட, இந்த ஆண்டு கோவிட் தொற்று காரணமாக அதிகமானோர் இறந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை தரவுகளின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் பரவல் தொடங்கியதிலிருந்து, ஏப்ரல் 20 ஆம் தேதி வரை 6,842 பேர் கோவிட் காரணமாக இறந்துள்ளனர்.

6,842 இறப்புகளில், 4,603 இறப்புகள் இந்த ஆண்டு பதிவாகியுள்ளன.

31 டிசம்பர் 2021 இறுதியில் ஆஸ்திரேலியாவில் 2,239 கோவிட்  இறப்புகள் பதிவாகியிருந்தன.

பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது அதிகரித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸின் XE தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குயின்ஸ்லாந்து மற்றும் ACT விரைவில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவைப் பின்பற்றி, Close contacts- நெருங்கிய தொடர்புகளுக்கான தனிமைப்படுத்தலை தளர்த்தவுள்ளதாகவும், தடுப்பூசி போடாத பயணிகள் விடுதிகளில் தனிமைப்படுத்தப்படும் நடைமுறையை நீக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 21 April 2022 4:01pm
Updated 21 April 2022 4:13pm


Share this with family and friends