ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 70 பேர் மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து பெப்ரவரி மாதம் 9ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

A computer generated image of the coronavirus omicron variant (Getty).

A computer generated image of the coronavirus omicron variant (Getty). Source: Getty Images

  • NSW, விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, ACT மற்றும் டாஸ்மேனியாவில் கோவிட் தொடர்பிலான 70 இறப்புகள் ஒரே நாளில் பதிவாகியுள்ளன.
  • NSW மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2068இல் இருந்து 1906 ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் 132 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
  • பிப்ரவரி 21 முதல் சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்டோரியா வரும் சுற்றுலாப் பயணிகள் booster உட்பட மூன்று சுற்று தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டுமென்ற விக்டோரிய அரசின் பரிந்துரையை சுற்றுலா அமைச்சர் Dan Tehan நிராகரித்துள்ளார்.
  • மேலும் சர்வதேச பயணிகளுக்கு நாட்டின் எல்லைகள் திறக்கப்படும்போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த அணுகுமுறை இருப்பது மிகவும் முக்கியமானது என Dan Tehan  தெரிவித்தார்.
  • விக்டோரிய மாநிலத்திலுள்ள விருந்தோம்பல்துறைசார்ந்த இடங்கள் மற்றும் பெரிய நிகழ்வுகளுக்குச் செல்பவர்கள், booster தடுப்பூசியையும் போட்டிருக்க வேண்டுமென்ற நடைமுறை கொண்டுவரப்படலாம் என மாநில Premier Daniel Andrews கோடிகாட்டியுள்ளார்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதமானோர் முழுமையாக கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக  Premier Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் தொடர்பான 24 மரணங்கள் பதிவாகியுள்ளநிலையில் அங்கு ஒரேநாளில் பதிவான அதிகூடிய மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 10,312 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர். 1906 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 132 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,908 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 21 பேர் மரணமடைந்தனர். 542 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 71 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,902 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 24 பேர் மரணமடைந்தனர். 686 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 44 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 574 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.  இருவர் மரணமடைந்தனர்.

ACT-இல் புதிதாக 475 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 54 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.  ஒருவர் மரணமடைந்தார்.

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில், புதிதாக 1671 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.  210 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 9 February 2022 3:31pm
Updated 9 February 2022 3:39pm


Share this with family and friends