- மூன்றாவது சுற்று (booster) தடுப்பூசி நவம்பர் 8ஆம் தேதி முதல் கிடைக்கும் என பிரதமர் அறிவித்தார்
- விக்டோரியா மாநிலத்தில் தொற்று அதிகமாகிய அண்மைய நாட்களில் ஒரே நாளில் அதிகளவு பேர் உயிரிழந்துள்ளார்கள்
- தடுப்பூசி போட மறுத்த 150 காவல் துறையினரை குயின்ஸ்லாந்து அரசு பணிநீக்கம் செய்தது
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,923 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளார்கள். தொற்று அதிகமாகிய அண்மைய நாட்களில், ஒரு நாளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையின் உச்சம் இதுவாகும்.
மாநிலத்தில் கட்டுப்பாடுகள் நாளை வெள்ளிக்கிழமை மேலும் தளர்த்தப்படவுள்ள நிலையில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இறந்தவர்கள் குடும்பங்களுக்குத் தனது அனுதாபத்தை வெளியிட்ட பிரதமர் Scott Morrison, “இந்தப் பெருந்தொற்று எவ்வளவு கொடூரமானது என்பதை இவர்களது இறப்புகள் எமக்கு ஞாபகப் படுத்துகின்றன” என்றார்.
கோவிட்-19 தடுப்பூசி போடாமலிருக்க விலக்கு கோருபவர்கள் Australian Immunisation Register எனும் நோய்த் தடுப்புப் பதிவேட்டை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று விக்டோரியா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 293 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
Darlinghurst என்ற இடத்திலுள்ள City Gym என்ற உடற் பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட தொற்றுடன் 15 தொற்றாளர்களுக்குத் தொடர்பு இருந்தது என்று சுகாதாரத் துறை அறிவித்தது.
இந்த உடற் பயிற்சிக் கூடத்திற்கு இந்த மாதம் 18, 23, மற்றும் 25ஆம் தேதிகளில் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்ட நேரங்களில் சென்றிருந்தால் உடனடியாக தொற்று இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளுமாறும், தொற்று இல்லை என்ற முடிவு கிடைக்கும் வரை தனிமைப்படுத்தப்பட்டு இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தொற்றுள்ள இடங்களுக்கு சென்றவர்களுக்கு Service NSW செயலி ஊடாக நாளை முதல் எச்சரிக்கை செய்திகள் அனுப்பி வைக்கப்படும் என்று மாநில வாடிக்கையாளர் சேவை அமைச்சர் Victor Dominello கூறினார்.
குயின்ஸ்லாந்து
மாநில காவல் துறையினர் அக்டோபர் 4ஆம் தேதிக்கு முன்னர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 150 காவல் துறையினரை குயின்ஸ்லாந்து அரசு இடைக்கால பணிநீக்கம் செய்துள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில்
- மருந்தகங்கள் அனைத்திலும் Pfizer தடுப்பூசி (முதல் இரண்டு சுற்றிற்கும், மூன்றாவது சுற்றாக – booster shot ஆக வழங்கப்படுவதற்கும்) நவம்பர் 8ஆம் தேதி முதல் கிடைக்கும்
- ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக எட்டுப் பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
- நாட்டு மக்களில் முக்கால்வாசிப் பேர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள் என்று பிரதமர் Scott Morrison அறிவித்தார்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.