- சிட்னியின் மேற்கு மற்றும் தென் மேற்குப் புற நகர் பகுதிகளில் தொற்று அதிகமாகப் பரவியுள்ளது
- விக்டோரியா மாநிலத்தில் 500ற்கும் மேற்பட்ட இடங்களில் தொற்று பரவியுள்ளது
- ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 22 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது
- குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் NT பிராந்தியத்திலும் புதிதாக யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 633 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 62 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.
Merrylands, Guilford, Auburn, Greenacre மற்றும் St Marys புறநகர்ப் பகுதிகளில் தொற்று அதிகமாகப் பரவுகிறது என்று Premier Gladys Berejiklian எச்சரித்தார்.
வசிக்கும் 16 வயதிற்கும் 39 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு, நாளை ஆகஸ்ட் 19ஆம் தேதி வியாழக்கிழமை முதல் ஃபைசர் தடுப்பூசி பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 24 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் நான்கு பேருக்கு ஏற்பட்ட தொற்று, ஏற்கனவே அறியப்பட்ட தொற்றுகளுடன் தொடர்புடையவை அல்ல. அத்துடன், தொற்றுள்ளவர்களில் ஆறு பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.
விக்டோரியா மாநிலத்தில் தொற்றுள்ளவர்களுடன் 15,000 பேர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள் என்றும், தற்போது பரவியுள்ளது என்றும் COVID-19 commander Jeroen Weimar கூறினார்.
கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:
- ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 22 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கன்பராவில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது.
- Cairns, Yarrabah, மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென் கிழக்குப் பகுதிகளிலுள்ள உள்ளூராட்சிப் பிரதேசங்களில் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை தளர்த்தப்படுகிறது.
- NT பிராந்தியத்தின் டார்வின் பெரு நகர் மற்றும் Katherine ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் நாளை மதியத்துடன் தளர்த்தப்படுகிறது.

Source: ALC
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.