- கோவிட் பரவலை கையாண்ட முறை தொடர்பில் முதியோர் பராமரிப்புத்துறை அமைச்சர் Richard Colbeck செனட் விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார். RAT மற்றும் PPE பற்றாக்குறை மற்றும் தாமதமான booster தடுப்பூசி திட்டம் குறித்து அவர் விசாரிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தற்போதைய கோவிட் பரவல் காரணமாக முதியோர் பராமரிப்பு மையங்களைச் சேர்ந்த சுமார் 566 பேர் இறந்துள்ளனர்.
- நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள முதியோர் மையங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் தற்போது 11 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் குறித்த மையங்களில் உள்ளவர்களில் பத்துப் பேரில் ஒருவர் மட்டுமே booster தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- பெருந்தொற்றுக்கால நெருக்கடியைக் கையாண்ட முறை தொடர்பில் பிரதமர் Morrison விமர்சிக்கப்பட்டிருந்த பின்னணியில், குறித்த விடயத்தில் தவறுகள் நடந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். எனினும் இவ்விடயத்தில் பிரதமர் மன்னிப்புக் கோரவில்லை.
- உமிழ்நீர் மாதிரியைப் பயன்படுத்தி கோவிட் சோதனையை மேற்கொள்ளும் ஒருவர் அதற்கான உமிழ்ரைச் சேகரிப்பதற்கு ஆகக்குறைந்தது 10-30 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிடவோ, குடிக்கவோ, புகைபிடிக்கவோ, பல் துலக்கவோ அல்லது chew gum மெல்லவோ கூடாது என TGA அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்யத்தவறும்பட்சத்தில் கோவிட் சோதனை முடிவு தவறாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக TGA சுட்டிக்காட்டியுள்ளது.
- தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில், omicron பரவலையடுத்து இடைநிறுத்தப்பட்ட elective surgeries, அடுத்த வாரத்திலிருந்து கட்டம்கட்டமாக மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.
- விக்டோரியாவில் அவசரமற்ற elective surgery அடுத்த வாரத்தில் மீண்டும் தொடங்கக்கூடும் என்றபோதிலும் செவிலியர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
- சுனாமியால் பாதிக்கப்பட்ட Tonga-வில் இருவருக்கு கோவிட் தொற்று இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இரண்டு நாட்கள் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படுகிறது. Tonga-வில் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபரில் கோவிட் தொற்று பதிவானது. தற்போதைய கோவிட் பரவல் ஆஸ்திரேலியாவின் நிவாரண உதவி முயற்சிகளுடன் தொடர்புபடுத்தப்படவில்லை.
- Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 11,807 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27 பேர் மரணமடைந்தனர். 2,622 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 170 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 14,553 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்தனர். 768 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 99 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 9,630 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16 பேர் மரணமடைந்தனர். 763 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 49 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 666 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக 1723 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 233 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 21 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.