பயணக் கட்டுப்பாடுகள்
- இந்நாட்டுக் குடியுரிமை பெற்ற மற்றும் நிரந்தர வதிவிட உரிமை பெற்ற NSW, விக்டோரியா மற்றும் ACT வாழ் மக்கள், தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருந்தால், இன்று முதல் பயண விலக்குக் கோராமலே வெளி நாடுகளுக்குப் பயணிக்க முடியும். அவர்கள் நாடு திரும்பும் போது, தனிமைப் படுத்தப்பட்டிருக்கத் தேவையில்லை.
- இந்நாட்டுக் குடியுரிமை பெற்ற மற்றும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களின் பெற்றோரும் இன்று முதல் வெளி நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.
- தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் சிட்னி பெரு நகரிலிருந்து NSW மாநில பிராந்திய இடங்களுக்கும், NSW மாநில பிராந்திய இடங்களிலிருந்து சிட்னி பெரு நகருக்கும் பொழுது போக்கு மற்றும் சுற்றுலா மேற்கொள்ள பயணிக்கலாம்.
- NSW மாநில எல்லைப் பிரதேசங்களில் வாழ்பவர்கள், NSW மாநிலத்திற்கு வர முன்னர் NSW entry declarations என்ற படிவம் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை.
- விக்டோரியா மாநிலத்தில் வாழும் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொள்ளவில்லை என்றால், இன்று முதல் பொழுது போக்கு மற்றும் சுற்றுலா என்ற காரணங்களுக்காக NSW மாநிலத்திற்கு செல்ல முடியாது.
- தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட கன்பரா வாசிகள் NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்.
தடுப்பூசி குறித்த செய்திகள்
- COVID-19 தடுப்பூசியின் இரண்டு சுற்றுகளைப் போட்டுக் கொண்ட ஆறு மாதங்களின் பின்னர், NSW மாநிலத்தில் வாழும் பெரியவர்கள் (adults) மூன்றாவது சுற்று தடுப்பூசியை மருந்தகங்கள், குடும்ப மருத்துவர்கள் மற்றும் தடுப்பூசி மையங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
Covid-19 புள்ளிவிவரங்கள்
- விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,471 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
- New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 135 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.