- NSW மாநிலத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிதி ஆதரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது
- விக்டோரிய மாநிலத்தில் மன நல ஆதரவு வழங்க மேலதிக நிதி ஒதுக்கீடு
- ACTயில் முடக்க நிலை அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப் படுகிறது
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,127 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் இறந்துள்ளார்கள்.
Yass Valley உள்ளூராட்சிப் பகுதியில் வாழும் ஒருவருக்குத் தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வாழ்பவர்கள் மற்றும் செப்டம்பர் 9ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னர் அந்தப் பகுதிக்கு சென்றவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்படுமாறு கேட்கப் பட்டுள்ளார்கள்.
Murrumbidgee சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட Young என்ற இடத்தில் வாழ்பவர்கள் அனைவரும் Covid-19 சோதனை செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள். அந்தப் பகுதி கழிவு நீரில் Covid-19 கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், தொற்றுள்ளவர் என்று யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
Covid-19 கட்டுப்பாடுகள் காரணமாக அதிகம் பாதிப்படைந்துள்ள கலாச்சாரம் மற்றும் மொழி ரீதியாக வேறுபட்ட குழுக்கள், சமூகங்கள் மற்றும் தொழிலாளர்கள் என யார் என்பது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 445 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் தற்போது மொத்தம் 3,799 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. தொற்றாளர்களில் 85 சத வீதமானவர்கள் 50 வயதிற்கும் குறைந்த வயதுடையவர்கள்.
மெல்பன் நகரிலும், விக்டோரிய மாநிலத்தின் பிராந்திய இடங்களிலும் மனநல சேவை நிலையங்கள் அமைக்க 22.1 மில்லியன் டொலர் திட்டம் ஒன்றை துணை Premier James Merlino அறிவித்தார்.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 22 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ACTயில் முடக்க நிலை மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஐந்து பேர் அல்லது நான்கு சதுர மீட்டருக்கு ஒரு நபர் என்ற கணக்கில் வணிக இடங்களுக்குள் அனுமதிப்பது என்பது உட்பட, கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில்
- மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடுத்த வாரம் முதல் ஃபைசர் தடுப்பூசி போட தகுதி பெறுவார்கள்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.