- நாடு முழுவதும் கோவிட் தொடர்பான மேலும் 98 இறப்புகள் பதிவாகியுள்ளன.
- கோவிட் பரவல் ஆரம்பித்ததுமுதல் ஒரே நாளில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மரணங்கள் பதிவாகின்றமை இதுவே முதல்தடவையாகும்.
- கோவிட்-19 பரவுவதைத் தடுக்க Northern Territory-இன் மத்திய பகுதி முழுவதும் உடனடியாக முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அங்குள்ள பூர்வீககுடிமக்களின் அமைப்புகள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளன.
- புதிய பள்ளி ஆண்டுக்கான திட்டமிடல் சிறப்பாக நடந்து வருவதாக NSW உறுதிப்படுத்தியுள்ளது.
- இருப்பினும் குயின்ஸ்லாந்தில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பிற்காக காத்திருக்கிறார்கள்.
- 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான booster தடுப்பூசியாக Pfizer-ஐ வழங்குவதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- குயின்ஸ்லாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான கோவிட் இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. மரணமடைந்த 18 பேரில் 12 பேர் முதியோர் பராமரிப்பு மையங்களைச் சேர்ந்தவர்கள்.
- "முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்" என்பதன் வரையறையை, 'மூன்று சுற்று தடுப்பூசியையும் போட்டுக்கொண்டவர்கள்' என்பதாக மாற்றலாமா என்பது குறித்து சுகாதார நிபுணர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
- Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 13,333 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 35 பேர் மரணமடைந்தனர். 2,737 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 189 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,755 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 39 பேர் மரணமடைந்தனர். 988 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 114 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 9,974 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர். 818 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 54 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 584 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக 1846 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர். 285 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 24 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
ACT-இல் புதிதாக 734 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 66 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.